இலங்கையில் மீன்பிடித் துறையை அபிவிருத்தி செய்வதற்கு சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையே உள்ள தொடர்பினை மிக வலுவாக கட்டியெழுப்புவது முக்கியம் என கடற்றொழில், நீரியல் வளங்கள்
மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் தெரிவித்தார். அமைச்சர் மற்றும் இலங்கை சீன மக்கள் குடியரசின் தூதுவர் திரு கியூ ஷென்ஹொங் (Qi Zhenhong) ஆகியோர்களுக்கு இடையில் ஜனவரி 09ஆந் திகதி கடற்றொழில் அமைச்சில் நடைபெற்ற சந்திப்பில் அமைச்சர் இவ்வாறு கூறினார்.
கடற்றொழில் மற்றும் கடல் வளங்கள் பிரிவுகளில் இரு தரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பான முக்கியத்துவம் பற்றி இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், மீன்பிடித் துறைக்கான நிலைபேறான அபிவிருத்தி, கடல் வளங்களின் முகாமைத்துவம், அத்துறைக்கான அறிவு பரிமாற்றம் தொழில்நுட்ப உதவி வழங்குதல் போன்ற விடயங்களில் சீனாவின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கைக்கான சீன மக்கள் குடியரசின் தூதுவர் தெரிவித்தார்.
இலங்கையின் அபிவிருத்திகாக சீனா தொடர்ந்து ஆதரவளிப்பது தொடர்பாக அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். இலங்கையில் மீன்பிடித் துறையில் நிலவும் சவால்களுக்கு முகங்கொடுப்பதற்கு வலுவான பங்களிப்பை விருத்தி செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அமைச்சர், இரு நாடுகளுக்கிடையிலான வரலாற்று உறவுகளை நினைவு கூர்ந்தபோது, இரு நாடுகளின் பொதுவான நோக்கத்தை அடைந்து கொள்வது மிக முக்கியமானது என சுட்டிக் காட்டப்பட்டது. இருதரப்பு உறவுகளை மேம்படுத்தல் மற்றும் மீன்பிடித் துறையின் நிலைபேறான வளர்ச்சிக்கு புதிய தீர்வுகளை ஆராயவும் இந்த இக்கலந்துரையாடலில் இணக்கம் காணப்பட்டது.
இலங்கையின் சீன தூதுவர் அலுவலகத்தின் – அமைச்சர், ஆலோசகர் மற்றும் பிரதிநிதிகள் குழுத் தலைவர் திரு வெயிஸூ, கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் கலாநிதி பீ. கே. கோலித கமல் ஜினதாஸ ஆகியோர்கள் இக்கலந்துரையாடலில் இணைந்து கொண்டனர்.