en banner

Ministerமத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் காரணமாக உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளதோடு, எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையினால் நாட்டின் மீன்பிடித்துறை எதிர்நோக்கியுள்ள பாரிய பிரச்சினைகள் குறித்து கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களுக்கும் கௌரவ ஜனாதிபதி அவர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

WhatsApp Image 2026 04 01 at 12.12.19கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்சார் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே, அண்மையில் (மார்ச் 24) சீனாவின் குவாங்சூவில் (Guangzhou) அமைந்துள்ள தென் சீன கடல் கடல்சார் ஆய்வு நிறுவனத்தில் (SCSIO) நடைபெற்ற "வெப்பமண்டல கடல்சார் சுற்றுச்சூழல் மாற்றங்கள் குறித்த சீன-இலங்கை கல்வி மன்றத்தில்" (China-Sri Lanka Academic Forum on Tropical Marine Environmental Changes) இலங்கை அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்டார்.

WhatsApp Image 2026 03 31 at 23.27.23 1இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே பிரான்சே (Mr. Marc-André Franche) மற்றும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று (30) அமைச்சில் நடைபெற்றது.

WhatsApp Image 2026 04 01 at 08.09.55பங்களாதேஷ் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக பிரவேசித்த குற்றச்சாட்டில் சுமார் எட்டு மாதங்களாக அந்த நாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆறு இலங்கை மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த ஆறு பேரும் நாளை (ஏப்ரல் 02) இலங்கையை வந்தடையவுள்ளனர்.

WhatsApp Image 2026 03 27 at 10.38.46 1சீன மக்கள் குடியரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் அழைப்பிற்கு இணங்க, மார்ச் 25 முதல் 27 வரை பெய்ஜிங்கில் நடைபெற்ற ‘ZGC 2026 Forum Annual Conference’ சர்வதேச மாநாட்டில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே கலந்துகொண்டார்.

சமீபத்திய செய்திகள்

Youtube