இலங்கைக்கும் நோர்வேக்கும் இடையில் கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்புத் துறையிலான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களுக்கும் நோர்வேயின் பேர்கன்-வெஸ்ட்லாண்ட் பில்கே (Bergen-Vestland Flyke) கொன்சல் திரு. ஸ்டர்லே எச். பெடர்சன் (Sturle H. Pedersen) அவர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று (16) அமைச்சில் நடைபெற்றது.
'திட்வா' புயலால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் 11ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார்.
புத்தளம் மாவட்டத்தில் கடற்றொழில் சமூகத்தினர் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு துரித தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதியமைச்சர் திரு. ரத்ன கமகே அவர்களின் தலைமையில் இரண்டாவது மாவட்ட மீனவர் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்று (11) புத்தளம் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
குருநாகல் மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்று (11) கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதியமைச்சர் ரத்ன கமகே அவர்களின் தலைமையில் வெற்றிகரமாக நடைபெற்றது.
திட்வா புயலால் நாடு முழுவதிலும் உள்ள மீனவ சமூகத்தின் மீன்பிடிக் கலன்கள் மற்றும் உபகரணங்களுக்கு ஏற்பட்ட சேதங்களை ஆறு (06) மாதங்களுக்குள் முழுமையாக வழமை நிலைக்குக் கொண்டுவருவதற்காக கடற்றொழில் அமைச்சு துரித வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது. அமைச்சின் கீழ் இயங்கும் சீ-நோர் (Cey-Nor) மன்றம் மற்றும் நோர்த் சீ (North Sea) நிறுவனம் ஆகியவை இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளன.
சமீபத்திய செய்திகள்
- அமைச்சர் சந்திரசேகரின் எதிர்வரும் ஏப்ரல் மாத நோர்வே விஜயத்திற்கு முன்னதாக, கடற்றொழில் துறையில் புதிய முதலீட்டு வாய்ப்புகளை இனங்காண்பதற்கான விசேட கலந்துரையாடல்
- 'திட்வா' சூறாவளியால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மீனவர்களுக்கு அமைச்சர் சந்திரசேகரின் துரித நிவாரணம்: நவீன தொழில்நுட்பத்தினூடாக கடற்றொழில்துறையை மேம்படுத்தவும் நடவடிக்கை
- குருநாகல் நன்னீர் கடற்றொழில் துறையில் பாரிய முன்னேற்றம்: பிரதியமைச்சர் ரத்ன கமகே தலைமையிலான கூட்டத்தில் பாராட்டு
- புத்தளம் மாவட்ட கடற்றொழிலாளர் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பிரதியமைச்சர் ரத்ன கமகேயின் துரித நடவடிக்கை கடலோர அரிப்பைத் தடுத்தல் மற்றும் துறைமுக உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் விசேட கவனம்
- திட்வா சவாலை வெற்றிகொள்ளல்: 9 மாவட்டங்களில் நன்னீர் மீன்பிடிப் படகுகளின் திருத்தப் பணிகள் வெற்றிகரமாக நிறைவு!





