
தேசிய மீன்வர் சம்மேளனம் 2025 ஆம் ஆண்டிற்கான அதன் முதல் பணிப்பாளர் சபை கூட்டத்தை ஜனவரி 28 அன்று அமைச்சகத்தின் கேட்போர் கூடத்தில் நடத்தியது, இந்நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் சம்மேளனத்தின் தலைவருமான ராமலிங்கம் சந்திரசேகர் தலைமை தாங்கினார்.
பிரதமர் கலாநிதி ஹரினி அமரசுரிய அவர்களால் பிரதமர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் தின நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் அவர்களும் கலந்து கொண்டார்.
இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராக சுரங்க பிரசாத் ஹிந்தல்ல ஆராச்சி அண்மையில் நியமிக்கப்பட்டார். இவருக்கான நியமனக் கடிதம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அண்மையில் (10) வழங்கப்பட்டது.

உள்ளுர் மீன் உணவு ஏற்றுமதியாளர்களின் பலமான கோரிக்கையாக இருந்த தரக் கட்டுப்பாட்டு அலகு கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலைய வளாகத்தில் 2024.01.26ஆந் திகதி அன்று திறந்து வைக்கப்பட்டது.

கடல் உணவு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் நிறுவனம் ஒன்றான CM Blue Crabs தனியார் நிறுவனம் நண்டு பதப்படுத்தும் தொழிற்சாலை ஒன்று 2024.01.16ஆந் திகதி மன்னார் பிரதேசத்தில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

ILO C 188 - 2007 மீன்பிடி கைத்தொழில் மற்றும் அது தொடர்பான தொழில் வாய்ப்புகளை உறுதிப்படுத்துவதற்கு தயாரிகப்பட்டுள்ள இலங்கை தொடர்பான வரைவின் ஒழுங்குவிதிக் கோவை கடற்றொழில் அமைச்சருக்கு மற்றும் தொழில் அமைச்சருக்கு வழங்குவதற்கான 2023.12.08ஆந் திகதி கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்ற கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

கிளிநொச்சி கரச்சி பிரதேச செயலகப் பிரிவுக்குரிய புதுமுறிப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள நன்னீர் குளங்களுக்கு 02 இலட்சம் மீன் குஞ்சுகளை விடுவிக்கும் வேலைத் திட்டத்தின் கீழ் கடந்த 19ஆந் திகதி மீன் குஞ்சுகளை விடுவிக்கும் தேசிய வைபவத்தின் முதற் கட்டமாக 150,000 மீன் குஞ்சுகளும் 2023.12.04ஆந் திகதி இரண்டாம் கட்டமாக 50,000 மீன் குஞ்சுகளும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் விடுவிக்கப்பட்டது.

வடக்கு-கிழக்கு மாகாணங்களில் கடற்றொழில்சார் அபிவிருத்திகளுக்காக ஜப்பான் அரசாங்கம் 03 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதியுதவியாக வழங்கியுள்ளதுடன் அது தொடர்பான ஒப்பந்தம் இன்று (22.11.2023) நிதி அமைச்சில்; கைச்சாத்திடப்பட்டது.

சீனக் குடியரசினால் இலங்கையின் கடற்றொழிலாளர்களுக்கு வழங்குவதற்காக உதவி அடிப்படையில் வழங்கப்பட்ட மண்ணெண்ணெய் விநியோகிக்கும் இரண்டாம் கட்ட செயல் திட்டம் கடந்த 02ம் திகதி முதல் நாடெங்கும் அமுல்படுத்தப்பட்டு வருகிறது.

கடற்றொழில் அமைச்சரினால் விரைவில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பதற்கு உத்தேசித்துள்ள புதிய கடற்றொழில் சட்டத்தின் மூலம் தேசிய மீனவ சம்மேளனத்தின் பொறுப்புகள் அதிகரிப்பதுடன், சம்மேளனம் மற்றும் கிராமிய மீனவ சங்கங்களின் பொறுப்புகள் கடற்றொழில் அமைச்சுக்கு வருமென தேசிய மகா சம்மேளனத்தின் பிரதான செயலாளர் திரு நெல்சன் எதிரிசிங்க அவர்கள் தெரிவித்ததார்.
பக்கம் 1 / 2
சமீபத்திய செய்திகள்
- இலங்கையின் கடற்றொழில் மற்றும் கடல்வளத் துறை மேம்பாடு: டென்மார்க்கின் முன்னணி நிறுவனங்களுடன் வெற்றிகரமான பேச்சுவார்த்தைகள்
- இலங்கையின் கடற்றொழில் கண்காணிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த நோர்வே அரசாங்கத்தின் AIS செயற்கைக்கோள் தொழில்நுட்ப உதவி மற்றும் அதிகாரிகளுக்கு விசேட பயிற்சிகள்
- இலங்கை மீன்பிடி படகுகளுக்கு பசுமை வலுசக்தியை அறிமுகப்படுத்தவும் அனர்த்த முகாமைத்துவ அமைப்பை வலுப்படுத்தவும் நோர்வே உதவி
- இலங்கையில் நீர்வாழ் உயிரின வளர்ப்பை மேம்படுத்துவதற்காக, உலகின் முன்னணி மீன் தீவன உற்பத்தி நிறுவனமான 'கார்கில்' (Cargill) நிறுவனத்துடன் விசேட கலந்துரையாடல்
- மாலைதீவு கடல் எல்லையை கடக்கும் பலநாள் மீன்பிடி கலன்களுக்கு கடும் சட்டங்கள்: விதிமுறைகளை மீறுவோருக்கு பாரிய அபராதம் விதிக்கப்படும் அபாயம்





