வங்காள விரிகுடா கடல்சார் சூழல் தொகுதியில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்களை நிலையான முறையில் முகாமைத்துவம் செய்வதற்கான ‘BOBLME II’ செயற்திட்டத்தின் மூன்றாவது பிராந்திய வழிகாட்டல் குழுக் கூட்டம் (3rd Regional Project Steering Committee Meeting) இன்று (19) நீர்கொழும்பு ஜெட்விங் சீ (Jetwing Sea) ஹோட்டலில் ஆரம்பமானது.
தென் மாகாண மீனவ அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், ஹிக்கடுவ பிரதேச மீனவ சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் தொழில்சார் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட உயிர் காக்கும் அங்கிகள் (Life Jackets) மற்றும் ஏனைய பாதுகாப்பு உபகரணங்களை விநியோகிக்கும் விசேட வேலைத்திட்டம், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் தலைமையில் கடந்த மே 15ஆம் திகதி ஹிக்கடுவ பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
நாட்டின் நன்னீர் இறால் வளர்ப்புத் துறையை நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக அதிக அறுவடை தரும் ஒரு வணிகத் துறையாக மாற்றியமைக்கும் நோக்கில், கௌரவ ஜனாதிபதி அவர்களால் 2025 வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 25 மில்லியன் ரூபா நிதியின்கீழ் விசேட திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் (NAQDA) தலைவர் கித்சிறி தர்மப்பிரிய தெரிவித்தார்.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களுக்கும், இலங்கைக்கான நோர்வே தூதரகப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட உத்தியோகபூர்வ சந்திப்பொன்று இன்று (18) முற்பகல் அமைச்சில் நடைபெற்றது.
இலங்கை மற்றும் ஓமான் ஆகிய நாடுகளுக்கு இடையில் கடற்றொழில் மற்றும் கடல் வளங்கள் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், ஓமான் நாட்டின் உயர்மட்ட கைத்தொழில் தூதுக்குழுவிற்கும் கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (14) முற்பகல் அமைச்சின் வளாகத்தில் நடைபெற்றது
சமீபத்திய செய்திகள்
- நாட்டின் படகு ஏற்றுமதித் துறைக்கு புத்துயிர் : பேருவளை புதிய படகு இறங்குத்துறையின் செயல்பாடுகளை கடற்றொழில் துறைமுகக் கூட்டுத்தாபனத்திடம் ஒப்படைக்க இணக்கம் - பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் பங்கேற்புடன் விசேட கலந்துரையாடல்
- மாத்தறை மீனவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க விரைவான நடவடிக்கை: ஒதுக்கப்பட்ட பாரிய நிதியை முறையாகப் பயன்படுத்தி மீனவர்களுக்கு அதிகபட்ச சேவையை வழங்குங்கள் - அதிகாரிகளுக்கு பிரதி அமைச்சர் ரத்ன கமகே கடும் அறிவுறுத்தல்
- நாட்டைச் சூழவுள்ள கடற்பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும் : காங்கேசன்துறையிலிருந்து கற்பிட்டி வரை மீன்பிடி நடவடிக்கைகளைத் தவிர்க்கவும் – கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தின் அவசர அறிவிப்பு
- சமுத்திரப் பாதுகாப்பிற்கான சவால்களை வெற்றிகொள்ள சர்வதேச ஒத்துழைப்பு அவசியம் - ஜப்பானில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவிப்பு
- ஹம்பாந்தோட்டை மீனவ சமூகத்தின் பிரச்சினைகளைத் தீர்க்க விரைவான நடவடிக்கை : நிவாரணப் பொதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து பிரதி அமைச்சர் ரத்ன கமகேவிடமிருந்து விசேட அறிவுறுத்தல்கள்





