நாட்டின் தற்போதைய விசேட சூழ்நிலை குறித்து ஜனாதிபதியுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் பின்னர் புதன்கிழமை விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்ட போதிலும், கடற்றொழில் துறையுடன் தொடர்புடைய அத்தியாவசிய சேவைகள் அனைத்தும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே. கோலித கமல் ஜினதாச தெரிவித்தார்.
கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தில் சுமார் பத்தாண்டுகளாக நிலவி வந்த உதவிப் பணிப்பாளர் வெற்றிடங்களை நிரப்பும் வகையில், புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 10 அதிகாரிகளுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் தலைமையில் நேற்று (24) அமைச்சகத்தில் நடைபெற்றது.
நிலவும் எரிபொருள் பிரச்சினை காரணமாக பொது நிர்வாக அமைச்சினால் ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் அத்தியாவசிய சேவைகள் தடையின்றி முன்னெடுக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வீசிய ‘Ditwa’ புயலினால் பாதிக்கப்பட்ட மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் 865.79 மில்லியன் ரூபா மதிப்பிலான பாரிய நிவாரண வேலைத்திட்டத்தின் கீழ், சிலாபம் மாவட்ட மீனவர்களுக்கு நிவாரணங்களை வழங்கும் விசேட நிகழ்வு இன்று (2026 மார்ச் 23) சிலாபம் மீன்பிடித் துறைமுகத்தில் நடைபெற்றது.
ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய, தற்போதைய சூழ்நிலையில் மீன்பிடித் துறையின் செயற்பாடுகளைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதை உறுதிப்படுத்தும் பொருட்டு புதிய எரிபொருள் முகாமைத்துவத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படுவதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே. கோலித கமல் ஜினதாச தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகள்
- අභියෝග ජයගත් අභිමානවත් ධීවර ප්රජාවට සහ සමස්ත ලක්වැසියන්ට සාමය, සතුට පිරි සුබ අලුත් අවුරුද්දක් වේවා!
- ධීවර, ජලජ හා සාගර සම්පත් අමාත්ය රාමලිංගම් චන්ද්රසේකර් මහතාගේ සිංහල හා දෙමළ අලුත් අවුරුදු සුබපැතුම් පණිවිඩය
- இலங்கை - மாலைதீவு கடற்றொழில் ஒத்துழைப்பு வலுப்படுத்தப்படுகிறது: மாலைதீவு ஜனாதிபதியின் வருகை மற்றும் கடற்றொழில் துறையின் புதிய முதலீடுகள் குறித்து அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் மாலைதீவு உயர்ஸ்தானிகர் இடையில் கலந்துரையாடல்
- கடற்றொழில் சுழியோடிகளின் தொழில்சார் அபாயங்களை உள்ளடக்கிய புதிய காப்புறுதித் திட்டம் : பிரதி அமைச்சர் ரத்ன கமகே தலைமையில் கற்பிட்டியில் ஆரம்பம்
- தற்போதைய மத்திய கிழக்கு யுத்த சூழ்நிலை காரணமாக நாட்டின் பல துறைகள் கடுமையாக





