en banner

New Pictureநிலவும் எரிபொருள் பிரச்சினை காரணமாக பொது நிர்வாக அமைச்சினால் ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் அத்தியாவசிய சேவைகள் தடையின்றி முன்னெடுக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Image 2026 03 18 at 09.08.24ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய, தற்போதைய சூழ்நிலையில் மீன்பிடித் துறையின் செயற்பாடுகளைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதை உறுதிப்படுத்தும் பொருட்டு புதிய எரிபொருள் முகாமைத்துவத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படுவதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே. கோலித கமல் ஜினதாச தெரிவித்தார்.

WhatsApp Image 2026 03 18 at 17.10.59தென் மாகாணத்தின் கடல் மற்றும் நன்னீர் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், 86 இலட்சம் ரூபா பெறுமதியான கடற்றொழில் உபகரணங்கள் மற்றும் மீன் விற்பனை கொள்கலன்களை வழங்கும் விசேட திட்டமொன்று கடந்த மார்ச் 13ஆம் திகதி மாத்தறை மற்றும் காலி மாவட்டங்களில் நடைபெற்றது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தலைமையில் இந்நிகழ்வுகள் இடம்பெற்றன. இதற்கான நிதி ஒதுக்கீடுகளை தென் மாகாண கடற்றொழில் அமைச்சு வழங்கியிருந்தது.

 DSC7884.jpgஇலங்கைக்கும் நோர்வேக்கும் இடையில் கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்புத் துறையிலான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களுக்கும் நோர்வேயின் பேர்கன்-வெஸ்ட்லாண்ட் பில்கே (Bergen-Vestland Flyke) கொன்சல் திரு. ஸ்டர்லே எச். பெடர்சன் (Sturle H. Pedersen) அவர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று (16) அமைச்சில் நடைபெற்றது.

WhatsApp Image 2026 03 13 at 23.18.00 9'திட்வா' புயலால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் 11ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார்.

சமீபத்திய செய்திகள்

Youtube