en banner

முதலீட்டு வாய்ப்புகள்

15,000 க்கும் மேற்பட்ட முதலீட்டு வாய்ப்புகள் உங்களுக்காக காத்திருக்கின்றன.

வாய்ப்புகளை காண இங்கே கிளிக் செய்யவும்

சர்வதேச இணக்கம்

கடற்றொழில் நீரியல் வளத்துறை சர்வதேச தரங்களுடனான இணக்கம்

இணக்கத்தை காண இங்கே கிளிக் செய்யவும்

தேசிய கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரினச் செய்கை கொள்கை

நோக்கம்

கடற்றொழில் நீரியல் வளங்களின் பாதுகாப்பு மற்றும் உறுதியான பயன்பாடு சம்பந்தமாக தெற்கு ஆசிய வலயத்தில் அற்புத நாடாக ஆக்குதல்.

29
ஜன2025
தேசிய மீனவர் சம்மேளனத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான முதலாவது பணிப்பாளர் சபை கூட்டம்.

தேசிய மீனவர் சம்மேளனத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான முதலாவது பணிப்பாளர்...

தேசிய மீன்வர் சம்மேளனம் 2025 ஆம் ஆண்டிற்கான அதன் முதல் பணிப்பாளர் சபை கூட்டத்தை ஜனவரி 28 அன்று அமைச்சகத்தின் கேட்போர் கூடத்தில் நடத்தியது, இந்நிகழ்வில் கடற்றொழில்,...

14
ஜன2025
தைப் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்.

தைப் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்.

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசுரிய அவர்களால் பிரதமர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் தின நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் அவர்களும் கலந்து கொண்டார். 

19
ஜூன்2024
கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராக சுரங்க பிரசாத் ஹிந்தல்ல  ஆராச்சி நியமனம்

கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராக சுரங்க பிரசாத் ஹிந்தல்ல ஆராச்சி...

இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராக  சுரங்க பிரசாத் ஹிந்தல்ல ஆராச்சி அண்மையில் நியமிக்கப்பட்டார். இவருக்கான நியமனக் கடிதம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அண்மையில் (10) ...

29
ஜன2024
உள்ளுர் மீன் உணவு ஏற்றுமதியாளர்களின் வசதிக்காக கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலைய வளாகத்தில் உள்ள மீன் உணவு தரக் கட்டுப்பாட்டுப் பிரிவில் புதிய அலுவலகத் தொகுதி திறந்து வைக்கப்படுகிறது.

உள்ளுர் மீன் உணவு ஏற்றுமதியாளர்களின் வசதிக்காக கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான...

உள்ளுர் மீன் உணவு ஏற்றுமதியாளர்களின் பலமான கோரிக்கையாக இருந்த தரக் கட்டுப்பாட்டு அலகு கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலைய வளாகத்தில் 2024.01.26ஆந் திகதி அன்று திறந்து வைக்கப்பட்டது. 

அடைவுகளுக்கு

புதிய செயலகம்,
மாளிகாவத்தை,
கொழும்பு 10,
இலங்கை

  • +94 112 446 183 / 4
  • +94 112 541 184
  • info[at]fisheries.gov.lk

விசாரணை

WhatsApp Image 2024 07 16 at 13.08.34 76b51021

வரையறுக்கப்பட்ட தனியார் இலங்கை கடல் உணவுகள் பண்ணை Ceylon sea food farm) கம்பனியினால் ரூபா 1,000 மில்லியன் வரை முதலீடு செய்து கிளிநொச்சி மாவட்டத்தில் கவுதாரிமுனை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட 25 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இறால் பண்ணை ஒன்று 2024.07.14ஆந் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த அவர்கள் திறந்து வைத்தார்.  

இந்த இறால் பண்ணை கவுதாரிமுனை kn/68 ஆம் இலக்க கிராம அலுவலர் பிரிவான மினாரிஓடை பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இங்கு ஏராளமானோர் தொழில் புரிகின்றனர். இந்த செயற்றிடத்தை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த அவர்கள் ஆரம்பித்து வைத்தபோது,  இறால் வளர்ப்பு மற்றும் நன்னீர் மீன் வளர்ப்பு, இந்நாட்டுக்கு அந்நிய செலவாணியை அதிகமாக கொண்டுவரும் பிரதன வழியாகும் எனத் தெரிவித்தார்.

இவ்வாறான செய்கைக்கு கடற்றொழில் அமைச்சு பெருமளவு உதவி ஒத்தாசைகள் வழங்கும் எனவும், இந்த உதவி உபகாரங்களைக் கொண்டு இவ்வாறான பண்ணைகளை உருவாக்கி அந்நிய செலாவணியைக் கொண்டுவருவதும் இந்நாட்டு முதலீட்டாளர்களின் கடமை எனவும், தெரிவித்தார். மேலும் எமது நாட்டு மக்களின் புரொட்டின் தேவையை பூர்த்தி செய்வதற்கு இறால் செய்கை மிக முக்கியமானதெனவும், சுட்டிக் காட்டிய அமைச்சர், குறிப்பாக சுற்றுலாத் துறை வளர்ச்சியடைந்துவரும்  இந்நேரத்தில் சுற்றுலாப் பயணிகளின் முக்கிய உணவுகளில் ஒன்றான இறால் உற்பத்தியின் மூலம் முதலீட்டாளர்களின் வருமானத்தை அதிகாpக்க முடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார். 

இச்சந்தர்பத்தில் வட மாகாணத்தின் நக்டா நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகள் அடங்கலாக பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தனர். 

WhatsApp Image 2024 07 16 at 13.08.37 a4ecf478

WhatsApp Image 2024 07 16 at 13.08.35 bb04df13

WhatsApp Image 2024 07 16 at 13.08.34 4e560998

 

FaLang translation system by Faboba
Youtube