
நுகர்வோர்கள் மத்தியில் நீர்வாழின மீன் நுகர்வுக்குப் பொருத்தமான உற்பத்தியை வழங்கும் நோக்குடன் நாடு முழுவதிலுமுள்ள உள்ளக நீர்;த் தேக்கங்களில் நீரியல் கைத்தொழிலின் விரைவான வளர்ச்சிக்கு வழிவகுக்கும் நோக்குடன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் கொண்டு வரப்பட்ட வேலைத் திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் நீர்வாழின மீன் இனப்பெருக்க நிலையங்களில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிவதற்கு 2023.04.09ஆந் திகதி கிழக்கு மாகாணத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்டார்.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து காரணமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு முடியாத மீனவர்களுக்கு நான்காவது சுற்று இழப்பீடு வழங்க எதிர்வரும் 2023.04.10ஆந் திகதி முதல் வழங்குவதற்கு தற்போது திட்டமிடப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.

அண்மைக் காலமாக பன் மடங்கு அதிகரித்துள்ள மீன்பிடி சாதனங்களின் விலை அடுத்த சில மாதங்களில் ஓரளவு குறையுமென கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த த சில்வா அவர்கள் தெரிவித்தார்.
கடலுணவுகளின் ஏற்றுமதியின் மூலம் நாட்டுக்கு கிடைக்கும் அந்நிய செலாவணி முறையாக பேணப்படுவதில்லை என்று சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலையில் கடலுணவு ஏற்றுமதியின் மூலம் பெறப்படும் அந்நியச் செலாவணி முறையாக கிடைப்பதை உறுதி செய்வது மீன் ஏற்றுமதியாளர்களின் பொறுப்பாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

சட்ட விரோத கடற்றொழில் நடவடிக்கையினால் இலங்கையில் கடற்றொழில் தொழிலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் அதனைத் தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிள் தலைமையில் வடக்கு மீனவ சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் இந்திய மீனவ சங்கத்தின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் 2023.03.06ஆந் திகதி கச்சதீவில் நடைபெற்றது.
சமீபத்திய செய்திகள்
- நன்னீர் இறால் வளர்ப்புத் துறையில் பாரிய மாற்றம்: 25 மில்லியன் ரூபா ஜனாதிபதி நிதியொதுக்கீட்டில் புதிய தொழில்நுட்பத் திட்டம் ஆரம்பம்
- ஓமான் கைத்தொழில் தூதுக்குழுவிற்கும் கடற்றொழில் அமைச்சுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்: புதிய முதலீட்டு வாய்ப்புகளை ஆராய கள விஜயங்கள் ஆரம்பம்
- இலங்கையின் மீன்பிடித் துறையை நவீனமயப்படுத்த ஜப்பான் முழுமையான ஆதரவு
- இலங்கையின் இறால் வளர்ப்புத் துறையில் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் உயிரியல் பாதுகாப்பு முறைகள் அறிமுகம்: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் இத்திட்டம் வெற்றிகரமாக நிறைவு
- நாட்டைச் சூழவுள்ள கடல் பகுதிகளில் சீரற்ற காலநிலை: கடலோர மீனவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கடற்றொழில் பணிப்பாளர் நாயகம் அறிவுறுத்தல்





