நாட்டில் மேற்கொள்ளப்படும் நீர்வாழின செய்கை செயற்றிட்டத்துக்கு ஏற்ற காணிகளை விஞ்ஞான ரீதியில் இனம் கண்டு அச்செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது ஏற்படும் தேவையற்ற தாமதங்களைத் தடுத்து மக்களிடையே நீர்வாழின செய்கையை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.

உள்ளூர் ரின்மீன் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில், தனியார் நிறுவனம் ஒன்றுடன் இன்று ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இன்று (2023.01.20) இந்திய வெளிவிவகார அமைச்சர் திரு எஸ் ஜயசங்கர், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகளுக்கிடையில் இந்திய பல்தின படகுகள் மூலம் இலங்கை கடற் பரப்பில் மேற்கொள்ளப்படும் அத்துமீறல் மற்றும் சட்ட விரோதமான மீன்பிடி நடவடிக்கை சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது.
தென் கடலில் இந்திய மீனவர்களால் மேற்கொள்ளப்படும் சட்டவிரோதமான கடற்றொழில் நடவடிக்கையை முற்றாக நிறுத்துவதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் 2023.01.24ஆந் திகதி கடற்றொழில் அமைச்சில் நடைபெற்ற விஷேட கலந்துரையாடலின்போது தெரிவித்தார்.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றில், முழங்காவில் அன்புபுரம் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் மற்றும் கொழும்பினை தலைமையகமாக கொண்ட 'வினிவித பௌன்டேஷன்' ஆகிய அமைப்புக்களின் பிரதிநிதிகளினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகள்
- அலங்கார மீன்பிடித்துறையை மேம்படுத்த புதிய வேலைத்திட்டம்: பண்ணையாளர்களுக்கு நிதி நிவாரணம் மற்றும் இறக்குமதித் தடைகளை நீக்க பிரதி அமைச்சர் ரத்ன கமகே நடவடிக்கை
- வங்காள விரிகுடா கடல் வளங்களைப் பாதுகாக்க பிராந்திய நாடுகள் நீர்கொழும்பில் ஒன்றிணைவு: BOBLME II திட்டத்தின் மூன்றாவது பிராந்திய வழிகாட்டல் குழுக் கூட்டம் இன்று ஆரம்பம்
- ஹிக்கடுவ மீனவ சமூகத்தின் தொழில்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக பிரதி அமைச்சர் ரத்ன கமகே தலைமையில் உயிர் காக்கும் அங்கிகள் வழங்கப்பட்டன.
- இலங்கையின் கடற்றொழில் துறையை நவீனமயமாக்க நோர்வேயின் தொழில்நுட்ப உதவி: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் நோர்வே தூதரக அதிகாரிகளுக்கிடையில் விசேட சந்திப்பு
- நன்னீர் இறால் வளர்ப்புத் துறையில் பாரிய மாற்றம்: 25 மில்லியன் ரூபா ஜனாதிபதி நிதியொதுக்கீட்டில் புதிய தொழில்நுட்பத் திட்டம் ஆரம்பம்





