
இந்நாட்டு மீன்பிடித் தொழிலில ஈடுபடும் பன்னாள் மீன்பிடிப் படகுகளுக்கு சலுகை விலையில் எரிபொருள் வழங்குவதற்குத் தேவையான வேலைத் திட்டம் தயாரிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் திரு டக்ளஸ் தேவானந்தா மற்றும் IOC கம்பனியின் பிரதிநிதிகளுக்கிடையில் 2023.11.27ஆந் திகதி கடற்றொழில் அமைச்சில் நடைபெற்றது.

ஏத்தனை விமர்சனங்கள் முன்வைத்தாலும், சமுத்திர வளங்களைப் பாதுகாப்பதற்கு மற்றும் மீனவர்களின் பாதுகாப்புக்காக புதிய கடற்றொழில் ஒழுங்குவிதிகளின் வரைபு மேற்கொள்ளப்படுமென கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.

சிலாபம் மீன்பிடித் துறைமுகத்தின் நிலப் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மீன் விற்பனைக்கு 15 கடைகள் சிலாபம் நகரத்தில் மீனவ சங்கத்துக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் வழங்கும் வைபவம் 2023.11.17ஆந் திகதி கடற்றொழில் அமைச்சில் நடைபெற்றது.

"தள ரல சவிய உலக மீனவர் தினம் - 2023” கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் திரு பியல் நிஷாந்த த சில்வா அவர்களின் மீனவர் தின வாழ்த்துச் செய்தி.

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் H.E MIZUKOSHI HIDEAKI அவர்கள் 2023.11.06ஆந் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்தார் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் வேண்டுகோளின் பேரில் இலங்கையில் மீன்பிடி நடவடிக்கையை அபிவிருத்தி செய்வதற்கு ஜப்பானிய அரசாங்கத்தால் வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்ட 435 மில்லியன் தொடர்பாக இங்கு கலந்துரையாடப்பட்டது.
சமீபத்திய செய்திகள்
- மத்திய கிழக்கு நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு விசேட கொடுப்பனவு : அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் ஜனாதிபதி இடையிலான கலந்துரையாடலைத் தொடர்ந்து இன்று அமைச்சரவையில் தீர்மானம்
- இலங்கை - சீனாவிற்கு இடையிலான கடல்சார் அறிவியல் மற்றும் கடற்றொழில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை - பிரதி அமைச்சர் ரத்ன கமகே சீனாவில் தெரிவிப்பு
- பங்களாதேஷில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 6 இலங்கை மீனவர்கள் 8 மாதங்களின் பின்னர் விடுதலை
- ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மற்றும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இடையில் சந்திப்பு: வட மாகாண அபிவிருத்தி மற்றும் கடற்றொழில் திட்டங்கள் குறித்து விசேட கவனம்
- கடல்சார் தொழில்நுட்பப் பரிமாற்றம் மற்றும் நிலையான கடல் அபிவிருத்திக்காக இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த நடவடிக்கை - பிரதி அமைச்சர் ரத்ன கமகே





