
அதிமேதகு ஜனாதிபதிரணில் விக்கிரமசிங்க அவர்கள், கௌரவ கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மற்றும் கௌரவ கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் பிரகாரம், கடற்றொழில் அமைச்சு மற்றும் கடற்றொழில், நீரியல் வளத் திணைக்களத்தினால் கடற்றொழில் துறையின் நலன் கருதி கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்தை நீண்டகாலம் பாதுகாத்தும் முகாமைத்துவம் செய்தும் நிலைபேறான அறுவடைகளைப் பெற்றுக் கொள்வதற்காக நடைமுறையிலுள்ள 1996ம் ஆண்டின் 02ம் இலக்க கடற்றொழில் நீரியல் வளச் சட்டத்தில் திருத்தங்கள் செய்து, புதிய கடற்றொழில் சட்டமூலமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சர்வதேச மீனவ தினத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் 21ஆந் திகதி யாழ்ப்பாணத்தில் நடாத்துவதற்கு கடற்றொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது. கடந்த வருடம் களுத்துறை மாவட்டத்தில் நடைபெற்றதுடன், இம்முறை இந்நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடாத்துவது பொருத்தமென கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் திரு பியல் நிஷாந்த அவர்கள் முன்மொழிந்துள்ளார்.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் 2023.09.10ஆந் திகதி பேலியாகொட மீன் விற்பனை சந்தைத் தொகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி நடவடிக்கைகளை அவதானிப்பதற்கு விஜயமொன்றை மேற்கொண்டார்
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சிலாபம் மீனவர்களின் பிரச்சனைக்குத் தீர்வு காண நடவடிக்கை
சிலாபம் பிரதேசத்தின் பல மீனவ அமைப்புகள் 2023.09.11ஆந் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களைச் சந்தித்து தமது பிரதேசத்துக்குள் மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் தொடர்பாக பல விடயங்களை முன்வைத்தனர்.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் பாதிக்கப்பட்ட நீர்கொழும்பு பிரதேசத்தின் ககருவாடு பதனிடும் தொழிலில் ஈடுபடும் மீனவ குழுவினர் 2023.09.04ஆந் திகதி கடற்றொழில் அமைச்சில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களைச் சந்தித்து, தமது தொழிலுக்கு இக்கப்பலினால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து தெரிவித்தனர்.
சமீபத்திய செய்திகள்
- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடற்றொழில் துறைக்கு அவுஸ்திரேலியா உதவிக்கரம்; படகுகள் கண்காணிப்பு அமைப்புக்கு தொடர்ச்சியான பங்களிப்பு வழங்கப்படும் எனவும் உறுதி
- சமாதானம், அன்பு மற்றும் புதிய நம்பிக்கைகள் நிறைந்த இனிய நத்தார் வாழ்த்துக்கள்!
- கிறிஸ்துமஸ் திருநாள் அன்பு, சமாதானம் மற்றும் தேசிய ஒற்றுமையின் உயரிய செய்தியை எடுத்துச் செல்கிறது – கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
- மீன்பிடித் துறைக்கு 765 கோடி ரூபாவுக்கும் அதிகமான வெள்ளச் சேதம்; துறையை மீளக் கட்டியெழுப்புவதற்கு அமைச்சர் சந்திரசேகர் விரிவான மீட்புத் திட்டத்தை அறிவித்தார்.
- அனர்த்தத்தின் பின்னர் கடற்றொழில் துறையை மீளக்கட்டியெழுப்ப ஜப்பானிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் (JICA) ஆதரவு!





