
சீனாவின் ஷாண்டோங் மாகாணத்தின் யான்டாய் நகர மேயர் கௌரவ ஜெங் டெயான் அவர்கள் தலைமையிலான உயர் மட்ட பிரதிநிதிகள் குழு, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், பிரதி அமைச்சர் ரத்ன கமகே, அமைச்சின் செயலாளர் மற்றும் அமைச்சின் கீழ் இயங்கும் அனைத்து நிறுவனங்களின் தலைவர்களும் கலந்துகொண்ட விசேட கலந்துரையாடல் நேற்று (மே 8, 2025) கடற்றொழில் அமைச்சின் வளாகத்தில் நடைபெற்றது.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களுக்கும் தென் கொரிய முதலீட்டாளர்கள் குழுவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (மே 8, 2025) அமைச்சில் நடைபெற்றது. இலங்கைக்கும் தென் கொரியாவுக்கும் இடையில் மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் துறையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதே இந்த சந்திப்பின் முக்கிய நோக்கமாகும்.
மதுரங்குளியில் உள்ள Ocean Food தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ஓஷன் ஸ்டார் ஜாக் மெக்கரல் டின் மீன்களை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஏற்றுமதி செய்வதற்காக கொள்கலன்களில் ஏற்றுவது, 2025 மார்ச் 29 அன்று தொழிற்சாலை வளாகத்தில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகேயின் தலைமையில் நடைபெற்றது.
கம்பஹா, பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் மீன் விற்பனை நிலையத்தில் விஷேட விற்பனை ஊக்குவிப்பு வேலைத்திட்டம் 04ம் மற்றும் 05 ஆம் திகதிகளில் வெற்றிகரமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Danusha Marine நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய மீன்பிடி படகின் வெளியீட்டு விழா 03ம் திகதி அன்று திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்தில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வள அமைச்சர் திரு.ராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சர் திரு.சுனில் ஹந்துன்நெத்தி தலைமையில் நடைபெற்றது.
சமீபத்திய செய்திகள்
- ஆழ்கடலில் விபத்துக்குள்ளான பலநாள் மீன்பிடிக் கலன்கள் குறித்து கடற்றொழில் திணைக்களம் தீவிர அவதானம்: கடலுக்குச் செல்வதற்கு முன் தொழில்நுட்பத் தகைமையை உறுதிப்படுத்துமாறு பணிப்பாளர் நாயகம் அறிவுறுத்தல்
- சீநோர் நிறுவனம் சர்வதேசத் தரத்திற்கு: மொரிஷியஸ் நாட்டுத் தனியார் துறைக்காகத் தயாரிக்கப்படும் பாரிய படகின் பணிகள் இறுதிக்கட்டத்தில் - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் விசேட களவிஜயம்
- அலங்கார மீன்பிடித்துறையை மேம்படுத்த புதிய வேலைத்திட்டம்: பண்ணையாளர்களுக்கு நிதி நிவாரணம் மற்றும் இறக்குமதித் தடைகளை நீக்க பிரதி அமைச்சர் ரத்ன கமகே நடவடிக்கை
- வங்காள விரிகுடா கடல் வளங்களைப் பாதுகாக்க பிராந்திய நாடுகள் நீர்கொழும்பில் ஒன்றிணைவு: BOBLME II திட்டத்தின் மூன்றாவது பிராந்திய வழிகாட்டல் குழுக் கூட்டம் இன்று ஆரம்பம்
- ஹிக்கடுவ மீனவ சமூகத்தின் தொழில்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக பிரதி அமைச்சர் ரத்ன கமகே தலைமையில் உயிர் காக்கும் அங்கிகள் வழங்கப்பட்டன.





