en banner

1623073395 Court orders Navy to provide security to sinking X Press Pearl B

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து காரணமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு முடியாத மீனவர்களுக்கு நான்காவது சுற்று இழப்பீடு வழங்க எதிர்வரும் 2023.04.10ஆந் திகதி முதல் வழங்குவதற்கு தற்போது திட்டமிடப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.

DSC 0805கடலுணவுகளின் ஏற்றுமதியின் மூலம் நாட்டுக்கு கிடைக்கும் அந்நிய செலாவணி முறையாக பேணப்படுவதில்லை என்று சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடு  பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும்  நிலையில் கடலுணவு ஏற்றுமதியின் மூலம் பெறப்படும் அந்நியச் செலாவணி முறையாக கிடைப்பதை உறுதி செய்வது மீன் ஏற்றுமதியாளர்களின் பொறுப்பாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

mini 3

சட்ட விரோத கடற்றொழில் நடவடிக்கையினால் இலங்கையில் கடற்றொழில் தொழிலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் அதனைத் தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிள் தலைமையில் வடக்கு மீனவ சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் இந்திய மீனவ சங்கத்தின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் 2023.03.06ஆந் திகதி கச்சதீவில் நடைபெற்றது.

WhatsApp Image 2023 03 14 at 13.33.17

அண்மைக் காலமாக பன் மடங்கு அதிகரித்துள்ள மீன்பிடி சாதனங்களின் விலை அடுத்த சில மாதங்களில் ஓரளவு குறையுமென கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த த சில்வா அவர்கள் தெரிவித்தார்.

mini

இந்நாட்டு மீனவர்களினால் சமுத்திரத்தில் மேற்கொள்ளப்படும் பொக்கண வலை மற்றும் வெளிச்சக் கவர்ச்சி போன்ற சட்ட விரோத மீன்பிடி நடவடிக்கையை முழுமையாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்குமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் 2023.02.21ஆந் திகதி கடற்றொழில் அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்

சமீபத்திய செய்திகள்

Youtube