
பின்னடைவை சந்தித்துள்ள மீன்பிடித் தொழிலை ஊக்குவித்து, உற்பத்திச் செலவைக் குறைப்பதற்காக ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மீனவ சமூகத்திற்கு எரிபொருள் மானியத்தை வழங்குமாறும் கௌரவ ஜனாதிபதி அவர்கள் திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

திரு. எம்.பீ.என்.எம். விக்ரமசிங்க அவர்கள் இலங்கை சனநாயக குடியரசின் விவசாயம், காணி, கால்நடை, நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சின் செயலாளராக 2024.09.25ஆந் திகதி முதல் நியமிக்கப்பட்டுள்ளார்

கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் மூலம் நாடளாவிய ரீதியில் நிறுவப்படும் நவீன மீன் விற்பனை நிலைய சங்கிலித் தொடரில் நவீனமயப்படுத்தப்பட்ட கிளை கடவத்த கொழும்பு – கண்டி பிரதான நெடுஞ்சாலையில் இல. 457 கொண்ட இடத்தில் (நிக்காடோ கட்டிடத்துக்கு எதிரில் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அடுத்தாக) கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் திரு பியல் நிஸாந்த த சில்வா தலைமையில் சுபவேளையில் திறந்து வைக்கப்பட்டது.

அண்மைக் காலத்தில் கௌரவ பிரதமர் திரு திணேஸ் குணவர்தண அவர்கள் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் சீன விஜயத்தின்போது மேற்கொள்ளப்பட்ட இராஜதந்திர கலந்துரையாடலின் பிரகாரம் சீன அரசாங்கத்திடமிருந்து உதவியாகப் பெறப்பட்ட சுமார் 75,000 வலைத் தொகுதிகள் வடக்கு கிழக்கு மீனவ குடும்பங்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார்.

IMULA0909TLE எனும் பதிவிலக்கம் கொண்ட “டேவன் புத்தா 05” எனும் பெயர் கொண்ட பன்னாட் படகின் படகோட்டி மற்றும் பணியாளர்கள் கடலில் மிதந்து வந்த போத்தலில் இருந்த திரவத்தை குடித்தமையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களின் உறவினர்களின் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்தா.
சமீபத்திய செய்திகள்
- உலகளாவிய கடற்றொழில் ஆளுகை தொடர்பான ஐ.நா மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் கடற்றொழில் அமைச்சின் செயலாளர்
- திருகோணமலை மீனவர் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண ஒருங்கிணைந்த அணுகுமுறை; அமைச்சு மட்டத்தில் பல உடனடித் தலையீடுகள்
- நீர்கொழும்பு களப்பைப் பாதுகாத்து சுற்றுலா ஈர்ப்பை வென்றெடுக்க புதிய இறங்குதுறை நிர்மாணம்: 318 மில்லியன் ரூபா பாரிய முதலீடு
- கடற்றொழில் துறைக்கு புதிய தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சிகளை இணைத்துக்கொண்டு 'நாரா' (NARA) நிறுவனத்திற்கு புதிய விஞ்ஞானிகள் குழாம் இணைப்பு
- மீன்பிடித் துறைமுகங்களில் குவிந்துள்ள பைபர் கிளாஸ் (Fiberglass) கழிவுகளை மீள்சுழற்சி செய்ய 56 மில்லியன் ரூபா பெறுமதியான திட்டம் ஆரம்பம்





