
திரு. எம்.பீ.என்.எம். விக்ரமசிங்க அவர்கள் இலங்கை சனநாயக குடியரசின் விவசாயம், காணி, கால்நடை, நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சின் செயலாளராக 2024.09.25ஆந் திகதி முதல் நியமிக்கப்பட்டுள்ளார்

அண்மைக் காலத்தில் கௌரவ பிரதமர் திரு திணேஸ் குணவர்தண அவர்கள் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் சீன விஜயத்தின்போது மேற்கொள்ளப்பட்ட இராஜதந்திர கலந்துரையாடலின் பிரகாரம் சீன அரசாங்கத்திடமிருந்து உதவியாகப் பெறப்பட்ட சுமார் 75,000 வலைத் தொகுதிகள் வடக்கு கிழக்கு மீனவ குடும்பங்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார்.

IMULA0909TLE எனும் பதிவிலக்கம் கொண்ட “டேவன் புத்தா 05” எனும் பெயர் கொண்ட பன்னாட் படகின் படகோட்டி மற்றும் பணியாளர்கள் கடலில் மிதந்து வந்த போத்தலில் இருந்த திரவத்தை குடித்தமையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களின் உறவினர்களின் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்தா.

கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் மூலம் நாடளாவிய ரீதியில் நிறுவப்படும் நவீன மீன் விற்பனை நிலைய சங்கிலித் தொடரில் நவீனமயப்படுத்தப்பட்ட கிளை கடவத்த கொழும்பு – கண்டி பிரதான நெடுஞ்சாலையில் இல. 457 கொண்ட இடத்தில் (நிக்காடோ கட்டிடத்துக்கு எதிரில் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அடுத்தாக) கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் திரு பியல் நிஸாந்த த சில்வா தலைமையில் சுபவேளையில் திறந்து வைக்கப்பட்டது.

கடந்த 2024.06.28ஆந் திகதி தெற்கில் உள்ள கடற்றொழில் துறைமுகங்களில் நிலவும் நிலையைக் கண்காணிப்பதற்கான சுற்றுப் பயணத்தில் ஈடுபட்ட கடற்றொழில் அமைச்சர், அதற்கமைய கிரிந்தையில் இருந்து பாணந்துறை வரையான கடற்றொழில் துறைமுகங்களில் நிலவும் தற்போதுள்ள குறைபாடுகளை உடனடியாகப் புனரமைப்பதற்கு ரூபா 1000 மில்லியன் அரசிடமிருந்து பெற்றுக் கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சமீபத்திய செய்திகள்
- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடற்றொழில் துறைக்கு அவுஸ்திரேலியா உதவிக்கரம்; படகுகள் கண்காணிப்பு அமைப்புக்கு தொடர்ச்சியான பங்களிப்பு வழங்கப்படும் எனவும் உறுதி
- சமாதானம், அன்பு மற்றும் புதிய நம்பிக்கைகள் நிறைந்த இனிய நத்தார் வாழ்த்துக்கள்!
- கிறிஸ்துமஸ் திருநாள் அன்பு, சமாதானம் மற்றும் தேசிய ஒற்றுமையின் உயரிய செய்தியை எடுத்துச் செல்கிறது – கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
- மீன்பிடித் துறைக்கு 765 கோடி ரூபாவுக்கும் அதிகமான வெள்ளச் சேதம்; துறையை மீளக் கட்டியெழுப்புவதற்கு அமைச்சர் சந்திரசேகர் விரிவான மீட்புத் திட்டத்தை அறிவித்தார்.
- அனர்த்தத்தின் பின்னர் கடற்றொழில் துறையை மீளக்கட்டியெழுப்ப ஜப்பானிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் (JICA) ஆதரவு!





