en banner

WhatsApp Image 2025 09 22 at 18.57.09கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு மற்றும் மாகாண சபைகளின் கீழ் செயற்படும் கடற்றொழில் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து, தேசிய மட்டத்தில் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் நோக்கில் ஒரு விசேட கலந்துரையாடல் இன்று (22) கடற்றொழில் அமைச்சு கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

1

தேசிய நீர்வாழ் சூழல் அமைப்பிற்கும், உள்ளூர் மீன் வளத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் ‘ஜெயன்ட் ஸ்னேக்ஹெட்’ (Giant Snakehead) எனும் ஆக்கிரமிப்பு வெளிநாட்டு மீன் இனத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாக ஏற்பாடு செய்யப்பட்ட "தெதுரு ஓயா மீன்பிடிப் போட்டி 2025", சனிக்கிழமை (செப்டம்பர் 20) தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் மிகவும் வெற்றிகரமாக நிறைவுற்றது.

 DSC0261தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் (NAQDA) பங்களிப்பை நாட்டின் அபிவிருத்திச் செயல்பாட்டில் முறையாகப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில், அதன் முற்போக்கு ஆய்வுக் கூட்டம் மீன்பிடி, நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் தலைமையில் செப்டம்பர் 16 ஆம் திகதி அந்த அதிகார சபையின் வளாகத்தில் நடைபெற்றது.

4.WhatsApp Image 2025 09 19 at 12.10.14 1

யாழ்ப்பாண மாவட்டத்தின் பொருளாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், மூன்று பாரிய அபிவிருத்தித் திட்டங்கள், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ விமல் ரத்நாயக்க ஆகியோரின் தலைமையில் 2025.09.18 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டன.

WhatsApp Image 2025 09 15 at 20.30.50

இந்நாட்டின் தேசிய நீரியல் சூழற்தொகுதியையும், உள்ளூர் மீன் வளத்தையும் கடுமையாக அச்சுறுத்தும், ஆக்கிரமிப்பு இயல்புடைய நான்கு வெளிநாட்டு மீன் இனங்களின் இறக்குமதி, வைத்திருத்தல், இனப்பெருக்கம் செய்தல் மற்றும் விற்பனை செய்தல் ஆகியவற்றைத் தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, கடற்றொழில், நீரியல் மற்றும் சமுத்திர வளங்கள் அமைச்சர், ராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் இன்று (15) நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் அறிவித்தார்.

சமீபத்திய செய்திகள்

Youtube