
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதி பீ.கே.கோலித கமல் ஜினதாச நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் (NAQDA) நடைமுறைப்படுத்தப்படும் "வெவ அபே கம்ஹலய்" திட்டத்தின் கீழ், கடந்த நான்கு மாத காலப்பகுதியில் நாடு முழுவதிலுமுள்ள பருவ கால மற்றும் நிரந்தர நீர்த்தேக்கங்களில் 18 மில்லியன் மீன் குஞ்சுகள் வெற்றிகரமாக இடப்பட்டுள்ளதாக அதன் தலைவர் திரு. கித்சிறி தர்மப்பிரிய தெரிவித்துள்ளார்.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களுக்கும் தென் கொரிய முதலீட்டாளர்கள் குழுவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (மே 8, 2025) அமைச்சில் நடைபெற்றது. இலங்கைக்கும் தென் கொரியாவுக்கும் இடையில் மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் துறையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதே இந்த சந்திப்பின் முக்கிய நோக்கமாகும்.

சீனாவின் ஷாண்டோங் மாகாணத்தின் யான்டாய் நகர மேயர் கௌரவ ஜெங் டெயான் அவர்கள் தலைமையிலான உயர் மட்ட பிரதிநிதிகள் குழு, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், பிரதி அமைச்சர் ரத்ன கமகே, அமைச்சின் செயலாளர் மற்றும் அமைச்சின் கீழ் இயங்கும் அனைத்து நிறுவனங்களின் தலைவர்களும் கலந்துகொண்ட விசேட கலந்துரையாடல் நேற்று (மே 8, 2025) கடற்றொழில் அமைச்சின் வளாகத்தில் நடைபெற்றது.
கம்பஹா, பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் மீன் விற்பனை நிலையத்தில் விஷேட விற்பனை ஊக்குவிப்பு வேலைத்திட்டம் 04ம் மற்றும் 05 ஆம் திகதிகளில் வெற்றிகரமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சமீபத்திய செய்திகள்
- உலகளாவிய கடற்றொழில் ஆளுகை தொடர்பான ஐ.நா மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் கடற்றொழில் அமைச்சின் செயலாளர்
- திருகோணமலை மீனவர் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண ஒருங்கிணைந்த அணுகுமுறை; அமைச்சு மட்டத்தில் பல உடனடித் தலையீடுகள்
- நீர்கொழும்பு களப்பைப் பாதுகாத்து சுற்றுலா ஈர்ப்பை வென்றெடுக்க புதிய இறங்குதுறை நிர்மாணம்: 318 மில்லியன் ரூபா பாரிய முதலீடு
- கடற்றொழில் துறைக்கு புதிய தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சிகளை இணைத்துக்கொண்டு 'நாரா' (NARA) நிறுவனத்திற்கு புதிய விஞ்ஞானிகள் குழாம் இணைப்பு
- மீன்பிடித் துறைமுகங்களில் குவிந்துள்ள பைபர் கிளாஸ் (Fiberglass) கழிவுகளை மீள்சுழற்சி செய்ய 56 மில்லியன் ரூபா பெறுமதியான திட்டம் ஆரம்பம்





