
இலங்கை தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் (NAQDA) நடைமுறைப்படுத்தப்படும் "வெவ அபே கம்ஹலய்" திட்டத்தின் கீழ், கடந்த நான்கு மாத காலப்பகுதியில் நாடு முழுவதிலுமுள்ள பருவ கால மற்றும் நிரந்தர நீர்த்தேக்கங்களில் 18 மில்லியன் மீன் குஞ்சுகள் வெற்றிகரமாக இடப்பட்டுள்ளதாக அதன் தலைவர் திரு. கித்சிறி தர்மப்பிரிய தெரிவித்துள்ளார்.

சீனாவின் ஷாண்டோங் மாகாணத்தின் யான்டாய் நகர மேயர் கௌரவ ஜெங் டெயான் அவர்கள் தலைமையிலான உயர் மட்ட பிரதிநிதிகள் குழு, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், பிரதி அமைச்சர் ரத்ன கமகே, அமைச்சின் செயலாளர் மற்றும் அமைச்சின் கீழ் இயங்கும் அனைத்து நிறுவனங்களின் தலைவர்களும் கலந்துகொண்ட விசேட கலந்துரையாடல் நேற்று (மே 8, 2025) கடற்றொழில் அமைச்சின் வளாகத்தில் நடைபெற்றது.
கம்பஹா, பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் மீன் விற்பனை நிலையத்தில் விஷேட விற்பனை ஊக்குவிப்பு வேலைத்திட்டம் 04ம் மற்றும் 05 ஆம் திகதிகளில் வெற்றிகரமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களுக்கும் தென் கொரிய முதலீட்டாளர்கள் குழுவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (மே 8, 2025) அமைச்சில் நடைபெற்றது. இலங்கைக்கும் தென் கொரியாவுக்கும் இடையில் மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் துறையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதே இந்த சந்திப்பின் முக்கிய நோக்கமாகும்.
மதுரங்குளியில் உள்ள Ocean Food தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ஓஷன் ஸ்டார் ஜாக் மெக்கரல் டின் மீன்களை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஏற்றுமதி செய்வதற்காக கொள்கலன்களில் ஏற்றுவது, 2025 மார்ச் 29 அன்று தொழிற்சாலை வளாகத்தில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகேயின் தலைமையில் நடைபெற்றது.
சமீபத்திய செய்திகள்
- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடற்றொழில் துறைக்கு அவுஸ்திரேலியா உதவிக்கரம்; படகுகள் கண்காணிப்பு அமைப்புக்கு தொடர்ச்சியான பங்களிப்பு வழங்கப்படும் எனவும் உறுதி
- சமாதானம், அன்பு மற்றும் புதிய நம்பிக்கைகள் நிறைந்த இனிய நத்தார் வாழ்த்துக்கள்!
- கிறிஸ்துமஸ் திருநாள் அன்பு, சமாதானம் மற்றும் தேசிய ஒற்றுமையின் உயரிய செய்தியை எடுத்துச் செல்கிறது – கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
- மீன்பிடித் துறைக்கு 765 கோடி ரூபாவுக்கும் அதிகமான வெள்ளச் சேதம்; துறையை மீளக் கட்டியெழுப்புவதற்கு அமைச்சர் சந்திரசேகர் விரிவான மீட்புத் திட்டத்தை அறிவித்தார்.
- அனர்த்தத்தின் பின்னர் கடற்றொழில் துறையை மீளக்கட்டியெழுப்ப ஜப்பானிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் (JICA) ஆதரவு!





