இறால் தொழில்துறையின் வளர்ச்சிக்குத் தடையாகவுள்ள தீர்மானமிக்க சவால்களுக்குத் தீர்வுகளைக் காண்பது மற்றும் அந்தத் துறையை தேசிய பொருளாதார இலக்குகளுடன் ஒருங்கிணைக்கும் நோக்கில், கடற்றொழில் அமைச்சு நேற்று (25) இறால் ஏற்றுமதியாளர்களுடன் உயர்மட்ட மூலோபாயக் கலந்துரையாடல் ஒன்றினை ஆரம்பித்தது.

2025 செப்டம்பர் 25 ஆம் திகதி அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஜனாதிபதி நிதியத்தின் செயற்பாடுகள் குறித்து தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் கருத்து தெரிவித்தார்.

போதைப்பொருள் கடத்தல்காரர்களின் நடவடிக்கையில் சிக்காமல் இருப்பது எப்படி என்பது தொடர்பில் கடற்றொழிலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு பணிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் கடல் வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் சர்வதேச மீன் ஏற்றுமதிச் சந்தையைப் பாதுகாக்கும் நோக்குடன், சட்டவிரோத, அறிக்கையிடப்படாத மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத (IUU) மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக, கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்திற்கும் ஏனைய 11 பிரதான அரச நிறுவனங்களுக்கும் இடையில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் 2025.09.22 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சு கேட்போர் கூடத்தில் கைச்சாத்திடப்பட்டது.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு மற்றும் மாகாண சபைகளின் கீழ் செயற்படும் கடற்றொழில் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து, தேசிய மட்டத்தில் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் நோக்கில் ஒரு விசேட கலந்துரையாடல் இன்று (22) கடற்றொழில் அமைச்சு கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
சமீபத்திய செய்திகள்
- අභියෝග ජයගත් අභිමානවත් ධීවර ප්රජාවට සහ සමස්ත ලක්වැසියන්ට සාමය, සතුට පිරි සුබ අලුත් අවුරුද්දක් වේවා!
- ධීවර, ජලජ හා සාගර සම්පත් අමාත්ය රාමලිංගම් චන්ද්රසේකර් මහතාගේ සිංහල හා දෙමළ අලුත් අවුරුදු සුබපැතුම් පණිවිඩය
- இலங்கை - மாலைதீவு கடற்றொழில் ஒத்துழைப்பு வலுப்படுத்தப்படுகிறது: மாலைதீவு ஜனாதிபதியின் வருகை மற்றும் கடற்றொழில் துறையின் புதிய முதலீடுகள் குறித்து அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் மாலைதீவு உயர்ஸ்தானிகர் இடையில் கலந்துரையாடல்
- கடற்றொழில் சுழியோடிகளின் தொழில்சார் அபாயங்களை உள்ளடக்கிய புதிய காப்புறுதித் திட்டம் : பிரதி அமைச்சர் ரத்ன கமகே தலைமையில் கற்பிட்டியில் ஆரம்பம்
- தற்போதைய மத்திய கிழக்கு யுத்த சூழ்நிலை காரணமாக நாட்டின் பல துறைகள் கடுமையாக





