
நாட்டின் வருமானத்துக்காகவும், மக்களின் ஊட்டச்சத்துக்காகவும் உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அவசியமென கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

"எமது இலக்கு, மீனவ சமூகத்திற்கு சுபீட்சத்தையும் கௌரவத்தையும் பெற்றுத் தரும் ஒரு வளமான எதிர்காலமாகும்"

அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட இலங்கையின் கடற்றொழில் துறையை மீளக் கட்டியெழுப்புவதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் ஆதரவைப் பெற்றுக்கொள்வது குறித்து, இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அதிமேதகு மெத்யூ டக்வொர்த் அவர்களுக்கும், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

பேரிடரால் ஏற்பட்ட இழப்புகளில் இருந்து மீண்டெழுவதற்கு நாம் தீவிரமாக முயற்சித்துக்கொண்டிருக்கின்றோம். இருந்த நிலையைவிட சிறந்த நிலைக்கு செல்வோம். அதற்காக அனைவரும் அர்ப்பணிப்புடன் செயல்படுவோம் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
உலகெங்கிலும் வாழும் கிறிஸ்தவப் பெருமக்களுடன் இணைந்து, சமாதானத்தின் தேவனாகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் இந்த உன்னத தருணத்தில், உங்கள் அனைவருக்கும் சமாதானமும் மகிழ்ச்சியும் நிறைந்த இனிய நத்தார் உதயமாகட்டும் என இதயபூர்வமாக வாழ்த்துகிறேன்.
சமீபத்திய செய்திகள்
- நன்னீர் இறால் வளர்ப்புத் துறையில் பாரிய மாற்றம்: 25 மில்லியன் ரூபா ஜனாதிபதி நிதியொதுக்கீட்டில் புதிய தொழில்நுட்பத் திட்டம் ஆரம்பம்
- ஓமான் கைத்தொழில் தூதுக்குழுவிற்கும் கடற்றொழில் அமைச்சுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்: புதிய முதலீட்டு வாய்ப்புகளை ஆராய கள விஜயங்கள் ஆரம்பம்
- இலங்கையின் மீன்பிடித் துறையை நவீனமயப்படுத்த ஜப்பான் முழுமையான ஆதரவு
- இலங்கையின் இறால் வளர்ப்புத் துறையில் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் உயிரியல் பாதுகாப்பு முறைகள் அறிமுகம்: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் இத்திட்டம் வெற்றிகரமாக நிறைவு
- நாட்டைச் சூழவுள்ள கடல் பகுதிகளில் சீரற்ற காலநிலை: கடலோர மீனவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கடற்றொழில் பணிப்பாளர் நாயகம் அறிவுறுத்தல்





