அண்மைக் காலத்தில் கௌரவ பிரதமர் திரு திணேஸ் குணவர்தண அவர்கள் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் சீன விஜயத்தின்போது மேற்கொள்ளப்பட்ட இராஜதந்திர கலந்துரையாடலின் பிரகாரம் சீன அரசாங்கத்திடமிருந்து உதவியாகப் பெறப்பட்ட சுமார் 75,000 வலைத் தொகுதிகள் வடக்கு கிழக்கு மீனவ குடும்பங்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார்.
கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் மூலம் நாடளாவிய ரீதியில் நிறுவப்படும் நவீன மீன் விற்பனை நிலைய சங்கிலித் தொடரில் நவீனமயப்படுத்தப்பட்ட கிளை கடவத்த கொழும்பு – கண்டி பிரதான நெடுஞ்சாலையில் இல. 457 கொண்ட இடத்தில் (நிக்காடோ கட்டிடத்துக்கு எதிரில் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அடுத்தாக) கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் திரு பியல் நிஸாந்த த சில்வா தலைமையில் சுபவேளையில் திறந்து வைக்கப்பட்டது.
கடந்த 2024.06.28ஆந் திகதி தெற்கில் உள்ள கடற்றொழில் துறைமுகங்களில் நிலவும் நிலையைக் கண்காணிப்பதற்கான சுற்றுப் பயணத்தில் ஈடுபட்ட கடற்றொழில் அமைச்சர், அதற்கமைய கிரிந்தையில் இருந்து பாணந்துறை வரையான கடற்றொழில் துறைமுகங்களில் நிலவும் தற்போதுள்ள குறைபாடுகளை உடனடியாகப் புனரமைப்பதற்கு ரூபா 1000 மில்லியன் அரசிடமிருந்து பெற்றுக் கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
IMULA0909TLE எனும் பதிவிலக்கம் கொண்ட “டேவன் புத்தா 05” எனும் பெயர் கொண்ட பன்னாட் படகின் படகோட்டி மற்றும் பணியாளர்கள் கடலில் மிதந்து வந்த போத்தலில் இருந்த திரவத்தை குடித்தமையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களின் உறவினர்களின் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்தா.
2024.06.29ஆந் திகதி தென் மாகாணத்தின் பல கடற்றொழில் துறைமுகங்களின் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், தற்போது தென் மாகாணத்தின் மிகப் பெரிய கடற்றொழில் துறைமுகமான கந்தர கடற்றெழில் துறைமுகத்தின் பணி நடவடிக்கைகள் இந்த வருடத்துக்குள் நிறைவு செய்து மீனவர்கள் கடலுக்குச் செல்வதற்குத் தேவையான வசதிகள் ஏற்பாடு செய்யப்படும் எனத் தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகள்
- மீன்பிடித் துறைமுகங்களின் அத்தியாவசியப் பிரச்சினைகளைத் தீர்க்க அமைச்சரவை அங்கீகாரத்துடன் 750 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
- இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரக்குக்குள் அத்துமீறினால் கைதுகள் தொடரும். படகுகள் பறிமுதல் செய்யப்படும். இது விடயத்தில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
- கடல் வளங்களைப் பாதுகாத்து, கரைவலை மீன்பிடித் தொழிலை மேம்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்
- ஏற்றுமதி வருவாயை அதிகரிக்க கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் புதிய திட்டம்
- பிரான்சில் வெற்றிகரமான பேச்சுவார்த்தைகளை முடித்த இலங்கை தூதுக்குழு, கடல்சார் மற்றும் மீன்வள ஒத்துழைப்பை மேம்படுத்த வழிவகை