
சீன ஹைனான் மாகாண மக்கள் காங்கிரஸின் நிலையியற் குழுவின் பிரதி பணிப்பாளர் யான் ஜிஜுன் அவர்களின் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர் நேற்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரை கடற்றொழில் அமைச்சில் சந்தித்தனர்.

இலங்கையின் வாழைச்சேனை, திருகோணமலை மற்றும் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகங்களில் நவீன கடல்சார் வானொலி தொடர்பு மற்றும் அவசரகால பதிலளிப்பு அலகுகள் (MRCU) நிறுவுவதற்கான திட்டத்திற்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சகத்தில் கையெழுத்தானது.
இதன்போது, தற்போது இலங்கையில் 60 அடிக்கு குறைவான பெரும்பாலான பலநாள் மீன்பிடி படகுகள் பனிக்கட்டியை மட்டுமே பயன்படுத்தி வருகின்றன; கப்பலிலுள்ள குளிரூட்டும் (refrigeration) அமைப்புகள் பெரும்பாலும் இல்லை.

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO), கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு, மற்றும் இலங்கை தேசிய நீர்வாழ் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபை (NAQDA) ஆகியவை இணைந்து, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரின் தலைமையில் இறால் தொழிற்துறை தகவல் அமைப்பு (SIIS) எனும் இலங்கையின் முதல் ஸ்மார்ட் மற்றும் நிலையான நீரியல் வளர்ப்பு டிஜிட்டல் தளத்தை அறிமுகப்படுத்தினர்.
மாத்தளை மாவட்ட நன்னீர் மற்றும் அலங்கார மீன் வளர்ப்பாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்ட 20ஆவது மாவட்ட மீன்பிடி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் தலைமையில் 04.11.2025 அன்று மாத்தளை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
சமீபத்திய செய்திகள்
- நாட்டின் படகு ஏற்றுமதித் துறைக்கு புத்துயிர் : பேருவளை புதிய படகு இறங்குத்துறையின் செயல்பாடுகளை கடற்றொழில் துறைமுகக் கூட்டுத்தாபனத்திடம் ஒப்படைக்க இணக்கம் - பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் பங்கேற்புடன் விசேட கலந்துரையாடல்
- மாத்தறை மீனவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க விரைவான நடவடிக்கை: ஒதுக்கப்பட்ட பாரிய நிதியை முறையாகப் பயன்படுத்தி மீனவர்களுக்கு அதிகபட்ச சேவையை வழங்குங்கள் - அதிகாரிகளுக்கு பிரதி அமைச்சர் ரத்ன கமகே கடும் அறிவுறுத்தல்
- நாட்டைச் சூழவுள்ள கடற்பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும் : காங்கேசன்துறையிலிருந்து கற்பிட்டி வரை மீன்பிடி நடவடிக்கைகளைத் தவிர்க்கவும் – கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தின் அவசர அறிவிப்பு
- சமுத்திரப் பாதுகாப்பிற்கான சவால்களை வெற்றிகொள்ள சர்வதேச ஒத்துழைப்பு அவசியம் - ஜப்பானில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவிப்பு
- ஹம்பாந்தோட்டை மீனவ சமூகத்தின் பிரச்சினைகளைத் தீர்க்க விரைவான நடவடிக்கை : நிவாரணப் பொதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து பிரதி அமைச்சர் ரத்ன கமகேவிடமிருந்து விசேட அறிவுறுத்தல்கள்





