தெற்காசியப் பிராந்தியத்தில் சிறிய மீன் வளர்ப்பாளர்களை வலுவூட்டுவதையும், போசாக்குப் பாதுகாப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட பிராந்திய "Aqua Livelihood" திட்டமானது, சார்க் அபிவிருத்தி நிதி (SDF) மற்றும் உறுப்பு நாடுகளின் தேசிய நிறுவனங்களுடன் இணைந்து இன்று (05) கொழும்பில் அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பத்து வருடங்களுக்கும் மேலான காலத்தின் பின்னர் நாட்டின் மீன்பிடித்துறையின் நிலைபேறான அபிவிருத்தி மற்றும் டிஜிட்டல்மயமாக்கலை இலக்காகக் கொண்ட "தேசிய மீன்பிடி படகுகள் கணக்கெடுப்பு - 2025", கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர், இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பிரதி அமைச்சர், ரத்ன கமகே ஆகியோரின் தலைமையில் இன்று (04) பாணந்துறை மீன்பிடித் துறைமுகத்தில் முறைப்படி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள அனைத்து நிறுவனங்களினதும் அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் 2025.07.28 ஆம் திகதி இலங்கை தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் (NAQDA) கேட்போர் கூடத்தில் இப்பயிற்சிப் பட்டறை வெற்றிகரமாக நிறைவுபெற்றது.
பொலன்னறுவை மாவட்ட நன்னீர் மீனவ சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக, இன்று (ஆகஸ்ட் 2) பொலன்னறுவை மாவட்ட செயலகத்தில் விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமொன்று நடைபெற்றது.
மீன்பிடித் துறையின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகள்: மாவட்ட மீன்பிடி ஒருங்கிணைப்புக் குழு கூடியது
மீன்பிடித் துறை எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடி, அவற்றுக்கு நடைமுறைத் தீர்வுகளை வழங்கும் நோக்கில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் தலைமையில், மாவட்ட மீன்பிடி ஒருங்கிணைப்பு அதிகாரிகளின் கூட்டம் நேற்று (25) அமைச்சின் வளாகத்தில் நடைபெற்றது.
சமீபத்திய செய்திகள்
- අභියෝග ජයගත් අභිමානවත් ධීවර ප්රජාවට සහ සමස්ත ලක්වැසියන්ට සාමය, සතුට පිරි සුබ අලුත් අවුරුද්දක් වේවා!
- ධීවර, ජලජ හා සාගර සම්පත් අමාත්ය රාමලිංගම් චන්ද්රසේකර් මහතාගේ සිංහල හා දෙමළ අලුත් අවුරුදු සුබපැතුම් පණිවිඩය
- இலங்கை - மாலைதீவு கடற்றொழில் ஒத்துழைப்பு வலுப்படுத்தப்படுகிறது: மாலைதீவு ஜனாதிபதியின் வருகை மற்றும் கடற்றொழில் துறையின் புதிய முதலீடுகள் குறித்து அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் மாலைதீவு உயர்ஸ்தானிகர் இடையில் கலந்துரையாடல்
- கடற்றொழில் சுழியோடிகளின் தொழில்சார் அபாயங்களை உள்ளடக்கிய புதிய காப்புறுதித் திட்டம் : பிரதி அமைச்சர் ரத்ன கமகே தலைமையில் கற்பிட்டியில் ஆரம்பம்
- தற்போதைய மத்திய கிழக்கு யுத்த சூழ்நிலை காரணமாக நாட்டின் பல துறைகள் கடுமையாக





