தென் கடலில் இந்திய மீனவர்களால் மேற்கொள்ளப்படும் சட்டவிரோதமான கடற்றொழில் நடவடிக்கையை முற்றாக நிறுத்துவதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் 2023.01.24ஆந் திகதி கடற்றொழில் அமைச்சில் நடைபெற்ற விஷேட கலந்துரையாடலின்போது தெரிவித்தார்.
இன்று (2023.01.20) இந்திய வெளிவிவகார அமைச்சர் திரு எஸ் ஜயசங்கர், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகளுக்கிடையில் இந்திய பல்தின படகுகள் மூலம் இலங்கை கடற் பரப்பில் மேற்கொள்ளப்படும் அத்துமீறல் மற்றும் சட்ட விரோதமான மீன்பிடி நடவடிக்கை சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது.
கடந்த தினம் தெற்கே கடற்றொழில் துறைமுகங்களில் உள்ள குறைபாடுகளை ஆராய்ந்து பாரப்பதற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அந்த விஜயத்தின் போது தென் மாகாண கடற்றொழில் துறைமுகங்களில் உள்ள குறைபாடுகளை நீக்கி அபிவிருத்தி செய்வதற்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா எனக் கண்டறிவதற்கு 2023.01.09ஆந் திகதி கடற்றொழில் அமைச்சில் கடற்றொழில் துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் மற்றும் கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்றை நடாத்தினார்
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றில், முழங்காவில் அன்புபுரம் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் மற்றும் கொழும்பினை தலைமையகமாக கொண்ட 'வினிவித பௌன்டேஷன்' ஆகிய அமைப்புக்களின் பிரதிநிதிகளினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் டொலர் பிரச்சனைக்குத் தீர்வாக தேசிய உற்பத்தியை அதிகரிப்பதற்கு அரசு தற்போது நடவடிக்கை எடுத்துள்ளதுடன் அதன் பிரதான பிரிவான மீன்பிடித் துறையை அபிவிருத்தி செய்தல் மற்றும் அதன் ஊடாக கிடைக்கும் அந்நிய செலாவணியை அதிகரிக்கும் நோக்குடன் நாட்டில் கடலட்டை செய்கையை அபிவிருத்தி செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
சமீபத்திய செய்திகள்
- மீன்பிடித் துறைமுகங்களின் அத்தியாவசியப் பிரச்சினைகளைத் தீர்க்க அமைச்சரவை அங்கீகாரத்துடன் 750 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
- இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரக்குக்குள் அத்துமீறினால் கைதுகள் தொடரும். படகுகள் பறிமுதல் செய்யப்படும். இது விடயத்தில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
- கடல் வளங்களைப் பாதுகாத்து, கரைவலை மீன்பிடித் தொழிலை மேம்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்
- ஏற்றுமதி வருவாயை அதிகரிக்க கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் புதிய திட்டம்
- பிரான்சில் வெற்றிகரமான பேச்சுவார்த்தைகளை முடித்த இலங்கை தூதுக்குழு, கடல்சார் மற்றும் மீன்வள ஒத்துழைப்பை மேம்படுத்த வழிவகை