en banner

DSC 0190

தென் கடலில் இந்திய மீனவர்களால் மேற்கொள்ளப்படும் சட்டவிரோதமான கடற்றொழில் நடவடிக்கையை முற்றாக நிறுத்துவதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் 2023.01.24ஆந் திகதி கடற்றொழில் அமைச்சில் நடைபெற்ற விஷேட கலந்துரையாடலின்போது தெரிவித்தார்.

IMG 20230121 WA0001

இன்று (2023.01.20) இந்திய வெளிவிவகார அமைச்சர் திரு எஸ் ஜயசங்கர், கடற்றொழில்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகளுக்கிடையில் இந்திய பல்தின படகுகள் மூலம் இலங்கை கடற் பரப்பில் மேற்கொள்ளப்படும் அத்துமீறல் மற்றும் சட்ட விரோதமான மீன்பிடி நடவடிக்கை சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது.

DSC 0364

கடந்த தினம் தெற்கே கடற்றொழில் துறைமுகங்களில் உள்ள குறைபாடுகளை ஆராய்ந்து பாரப்பதற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அந்த விஜயத்தின் போது தென் மாகாண கடற்றொழில் துறைமுகங்களில் உள்ள குறைபாடுகளை நீக்கி அபிவிருத்தி செய்வதற்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா எனக் கண்டறிவதற்கு 2023.01.09ஆந் திகதி கடற்றொழில் அமைச்சில்  கடற்றொழில் துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் மற்றும் கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்றை நடாத்தினார் 

minister douglas devananda

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றில், முழங்காவில் அன்புபுரம் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் மற்றும் கொழும்பினை தலைமையகமாக கொண்ட 'வினிவித பௌன்டேஷன்' ஆகிய அமைப்புக்களின் பிரதிநிதிகளினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

WhatsApp Image 2023 01 09 at 09.10.12

நாட்டில் நிலவும் டொலர் பிரச்சனைக்குத் தீர்வாக தேசிய உற்பத்தியை அதிகரிப்பதற்கு அரசு தற்போது நடவடிக்கை எடுத்துள்ளதுடன் அதன் பிரதான பிரிவான மீன்பிடித் துறையை அபிவிருத்தி செய்தல் மற்றும் அதன் ஊடாக கிடைக்கும் அந்நிய செலாவணியை அதிகரிக்கும் நோக்குடன் நாட்டில் கடலட்டை செய்கையை அபிவிருத்தி செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

Youtube