
கடந்த 2024.06.28ஆந் திகதி தெற்கில் உள்ள கடற்றொழில் துறைமுகங்களில் நிலவும் நிலையைக் கண்காணிப்பதற்கான சுற்றுப் பயணத்தில் ஈடுபட்ட கடற்றொழில் அமைச்சர், அதற்கமைய கிரிந்தையில் இருந்து பாணந்துறை வரையான கடற்றொழில் துறைமுகங்களில் நிலவும் தற்போதுள்ள குறைபாடுகளை உடனடியாகப் புனரமைப்பதற்கு ரூபா 1000 மில்லியன் அரசிடமிருந்து பெற்றுக் கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
2024.06.29ஆந் திகதி தென் மாகாணத்தின் பல கடற்றொழில் துறைமுகங்களின் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், தற்போது தென் மாகாணத்தின் மிகப் பெரிய கடற்றொழில் துறைமுகமான கந்தர கடற்றெழில் துறைமுகத்தின் பணி நடவடிக்கைகள் இந்த வருடத்துக்குள் நிறைவு செய்து மீனவர்கள் கடலுக்குச் செல்வதற்குத் தேவையான வசதிகள் ஏற்பாடு செய்யப்படும் எனத் தெரிவித்தார்.
இலங்கையில் முதல் தடவையாக தேசிய ரின்மீன் உற்பத்தி நிறுவனமான SLIC நிறுவனத்தினால் தனது நவீன தயாரிப்பான நீண்ட நாட்களுக்கு பழுதடையாமல் பாதுகாக்கக் கூடிய ஒருகிலோ எடை கொண்ட ஜக் மேக்கரல் செமன் பக்கற் ஒன்று சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு இன்று (21.06.2024) கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்றது.

கடந்த 05 மாதங்களுக்கு முன்னர், சிலாபம் கடலிருந்து அரபிக் கடலுக்கு மீன்பிடி நடவடிக்கைக்காகப் புறப்பட்டுச் சென்ற லோரன்ஸ் புத்தா எனும் பன்னாட் மீன்பிடிப் படகு மற்றும் அதிலிருந்த மீனவர்களும் சேமாலியா கடற் கொள்ளையர்களால், பிடிக்கப்பட்டனர்.

கடற்றொழில் அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள நிசாந்த விக்கிரமசிங்க இன்று (19) தமது அமைச்சில் வைத்து கடமைகளை பொறுப்பேற்றார்.
சமீபத்திய செய்திகள்
- உலகளாவிய கடற்றொழில் ஆளுகை தொடர்பான ஐ.நா மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் கடற்றொழில் அமைச்சின் செயலாளர்
- திருகோணமலை மீனவர் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண ஒருங்கிணைந்த அணுகுமுறை; அமைச்சு மட்டத்தில் பல உடனடித் தலையீடுகள்
- நீர்கொழும்பு களப்பைப் பாதுகாத்து சுற்றுலா ஈர்ப்பை வென்றெடுக்க புதிய இறங்குதுறை நிர்மாணம்: 318 மில்லியன் ரூபா பாரிய முதலீடு
- கடற்றொழில் துறைக்கு புதிய தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சிகளை இணைத்துக்கொண்டு 'நாரா' (NARA) நிறுவனத்திற்கு புதிய விஞ்ஞானிகள் குழாம் இணைப்பு
- மீன்பிடித் துறைமுகங்களில் குவிந்துள்ள பைபர் கிளாஸ் (Fiberglass) கழிவுகளை மீள்சுழற்சி செய்ய 56 மில்லியன் ரூபா பெறுமதியான திட்டம் ஆரம்பம்





