பின்னடைவை சந்தித்துள்ள மீன்பிடித் தொழிலை ஊக்குவித்து, உற்பத்திச் செலவைக் குறைப்பதற்காக ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மீனவ சமூகத்திற்கு எரிபொருள் மானியத்தை வழங்குமாறும் கௌரவ ஜனாதிபதி அவர்கள் திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
திரு. எம்.பீ.என்.எம். விக்ரமசிங்க அவர்கள் இலங்கை சனநாயக குடியரசின் விவசாயம், காணி, கால்நடை, நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சின் செயலாளராக 2024.09.25ஆந் திகதி முதல் நியமிக்கப்பட்டுள்ளார்
கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் மூலம் நாடளாவிய ரீதியில் நிறுவப்படும் நவீன மீன் விற்பனை நிலைய சங்கிலித் தொடரில் நவீனமயப்படுத்தப்பட்ட கிளை கடவத்த கொழும்பு – கண்டி பிரதான நெடுஞ்சாலையில் இல. 457 கொண்ட இடத்தில் (நிக்காடோ கட்டிடத்துக்கு எதிரில் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அடுத்தாக) கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் திரு பியல் நிஸாந்த த சில்வா தலைமையில் சுபவேளையில் திறந்து வைக்கப்பட்டது.
அண்மைக் காலத்தில் கௌரவ பிரதமர் திரு திணேஸ் குணவர்தண அவர்கள் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் சீன விஜயத்தின்போது மேற்கொள்ளப்பட்ட இராஜதந்திர கலந்துரையாடலின் பிரகாரம் சீன அரசாங்கத்திடமிருந்து உதவியாகப் பெறப்பட்ட சுமார் 75,000 வலைத் தொகுதிகள் வடக்கு கிழக்கு மீனவ குடும்பங்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார்.
IMULA0909TLE எனும் பதிவிலக்கம் கொண்ட “டேவன் புத்தா 05” எனும் பெயர் கொண்ட பன்னாட் படகின் படகோட்டி மற்றும் பணியாளர்கள் கடலில் மிதந்து வந்த போத்தலில் இருந்த திரவத்தை குடித்தமையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களின் உறவினர்களின் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்தா.
சமீபத்திய செய்திகள்
- இலங்கையில் தயாரிக்கப்பட்ட டின் மீன்கள் முதல் முறையாக வெளிநாட்டு ஏற்றுமதிக்கு
- இலங்கையின் மிகப்பெரிய மீன்பிடி படகு டிக்கோவிட்டவில் அறிமுகப்படுத்தப்பட்டது
- கொக்கல வாவியில் 60,000 மீன் குஞ்சுகள் விடுவிப்பு
- கடற்றொழில் அமைச்சு மற்றும் மாகாண மீன்வள அமைச்சுகளுடன் இணைந்து மீன்பிடித் தொழிலை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டம்
- *மீன்பிடித்துறைக்கு முன்னெப்போதும் இல்லாத ஒதுக்கீடு: 2025 வரவு செலவுத் திட்டத்தில் ரூ. 11.4 பில்லியன், கடந்த ஆண்டுடைவிட 62.85% வளர்ச்சி*