ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதி பீ.கே.கோலித கமல் ஜினதாச நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் (NAQDA) நடைமுறைப்படுத்தப்படும் "வெவ அபே கம்ஹலய்" திட்டத்தின் கீழ், கடந்த நான்கு மாத காலப்பகுதியில் நாடு முழுவதிலுமுள்ள பருவ கால மற்றும் நிரந்தர நீர்த்தேக்கங்களில் 18 மில்லியன் மீன் குஞ்சுகள் வெற்றிகரமாக இடப்பட்டுள்ளதாக அதன் தலைவர் திரு. கித்சிறி தர்மப்பிரிய தெரிவித்துள்ளார்.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களுக்கும் தென் கொரிய முதலீட்டாளர்கள் குழுவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (மே 8, 2025) அமைச்சில் நடைபெற்றது. இலங்கைக்கும் தென் கொரியாவுக்கும் இடையில் மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் துறையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதே இந்த சந்திப்பின் முக்கிய நோக்கமாகும்.
சீனாவின் ஷாண்டோங் மாகாணத்தின் யான்டாய் நகர மேயர் கௌரவ ஜெங் டெயான் அவர்கள் தலைமையிலான உயர் மட்ட பிரதிநிதிகள் குழு, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், பிரதி அமைச்சர் ரத்ன கமகே, அமைச்சின் செயலாளர் மற்றும் அமைச்சின் கீழ் இயங்கும் அனைத்து நிறுவனங்களின் தலைவர்களும் கலந்துகொண்ட விசேட கலந்துரையாடல் நேற்று (மே 8, 2025) கடற்றொழில் அமைச்சின் வளாகத்தில் நடைபெற்றது.
கம்பஹா, பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் மீன் விற்பனை நிலையத்தில் விஷேட விற்பனை ஊக்குவிப்பு வேலைத்திட்டம் 04ம் மற்றும் 05 ஆம் திகதிகளில் வெற்றிகரமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சமீபத்திய செய்திகள்
- ඉස්සන් ප්රති අපනයනය සඳහා නව සම්මත මෙහෙයුම් පටිපාටියක් හඳුන්වා දෙයි: කර්මාන්තයේ අභියෝගවලට විසඳුම්!
- இந்திய உயர்ஸ்தானிகருடன் கடற்றொழில் அமைச்சர் சந்திப்பு: மீனவர் பிரச்சினைகள், அபிவிருத்தி மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து விரிவான கலந்துரையாடல்
- யாழ். குடாநாட்டில் தீவு பகுதிகளுக்கு சுற்றுலாச் செல்லும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் --- அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவிப்பு
- இலங்கையின் நான்கு முக்கிய மீன்பிடி துறைமுகங்கள் அபிவிருத்திக்கு பிரான்ஸ் ஆதரவு: அமைச்சர் சந்திரசேகர் மற்றும் பிரெஞ்சு தூதுவர் சந்திப்பில் தகவல்
- வடக்கின் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து அமைச்சர் சந்திரசேகர் பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகரை தெளிவுபடுத்தினார்.